என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவில் பலியான டாக்டர் குடும்பத்துக்கு உதவ பிரியங்கா காந்தி கோரிக்கை
Byமாலை மலர்23 July 2020 3:21 AM GMT (Updated: 23 July 2020 3:21 AM GMT)
கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர் ஜாவத் அலி குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி :
டெல்லியில் தேசிய சுகாதார திட்டத்தில் ஜாவத் அலி என்ற டாக்டர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் முன் வரிசையில் நின்று அவர் பணியாற்றினார்.
ஆனால் அவரையும் கொரோனா தாக்கியது. சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமையன்று அவர் மரணம் அடைந்தார்.
அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “டாக்டர் ஜாவத் அலியும், பிற டாக்டர்களும் தங்களது உயிர்களை பணயம் வைத்து சேவை ஆற்றுகிறார்கள். டாக்டர் ஜாவத் அலி பற்றிய சோகமான செய்தி வந்தது. அவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இப்படிப்பட்ட தியாகிகளின் குடும்பங்களுடன் நாம் நிற்க வேண்டிய நேரம் இது. அரசு, சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் டாக்டர் ஜாவத் அலி குடும்பத்துக்கு செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.
டெல்லியில் தேசிய சுகாதார திட்டத்தில் ஜாவத் அலி என்ற டாக்டர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் முன் வரிசையில் நின்று அவர் பணியாற்றினார்.
ஆனால் அவரையும் கொரோனா தாக்கியது. சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமையன்று அவர் மரணம் அடைந்தார்.
அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “டாக்டர் ஜாவத் அலியும், பிற டாக்டர்களும் தங்களது உயிர்களை பணயம் வைத்து சேவை ஆற்றுகிறார்கள். டாக்டர் ஜாவத் அலி பற்றிய சோகமான செய்தி வந்தது. அவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இப்படிப்பட்ட தியாகிகளின் குடும்பங்களுடன் நாம் நிற்க வேண்டிய நேரம் இது. அரசு, சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் டாக்டர் ஜாவத் அலி குடும்பத்துக்கு செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X