என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.ஐ.யில் பதிவாகி உள்ள டி.கே.சிவக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி
Byமாலை மலர்23 July 2020 3:05 AM GMT (Updated: 23 July 2020 3:05 AM GMT)
டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு மற்றும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரு :
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூரு, டெல்லியில் உள்ள வீடுகளில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக பணம் சேர்த்தது குறித்து சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்திருந்தது. அதே நேரத்தில் கர்நாடக அரசும் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 25-ந் தேதி டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு மற்றும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி, அவரது ஆதரவாளர் சசிகுமார் சிவண்ணா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி சசிகுமார் சிவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் டி.கே.சிவக்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூரு, டெல்லியில் உள்ள வீடுகளில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக பணம் சேர்த்தது குறித்து சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்திருந்தது. அதே நேரத்தில் கர்நாடக அரசும் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 25-ந் தேதி டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு மற்றும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி, அவரது ஆதரவாளர் சசிகுமார் சிவண்ணா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி சசிகுமார் சிவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் டி.கே.சிவக்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X