search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜே.பி.நட்டா
    X
    ஜே.பி.நட்டா

    பிரதமர் மோடி மீதான ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

    ராகுல் காந்தி வழக்கம் போல் சேற்றை வாரி வீசி இருப்பதாகவும், ராணுவத்தையும், நாட்டின் வெளியுறவு கொள்கையையும் அவர் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.
    புதுடெல்லி :

    பிரதமர் மோடி தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று கூறுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி வழக்கம் போல் சேற்றை வாரி வீசி இருப்பதாகவும், ராணுவத்தையும், நாட்டின் வெளியுறவு கொள்கையையும் அவர் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் கூறி இருக்கிறார். நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபடும் பிரதமர் மோடியின் செல்வாக்கை அழிக்க நினைப்பவர்கள், தங்கள் சொந்த கட்சியையே அழித்துக் கொள்வார்கள் என்றும் அதில் ஜே.பி.நட்டா குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×