என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்கள் 3 பேர் பலி
Byமாலை மலர்17 July 2020 9:17 PM GMT (Updated: 17 July 2020 9:17 PM GMT)
காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர்:
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் எல்லையில் உள்ள கிராமங்கங்களை குறிவைத்து பாகிஸ்தான் தரப்பு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர்..
இந்நிலையில், எல்லையோரமுல்ல காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கோல்பூர் கிராமப்பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறு ரக பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் கோல்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு நபர் படுகாயம் அடைந்தார்.
இந்த தாக்குதலையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு கூடுதல் படைகள் விரைந்து சென்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்கபதிலடி கொடுக்கப்பட்டது. பூஞ்ச் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X