search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல் மந்திரி பினராயி விஜயன்

    கேரளாவில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று - ஒரே நாளில் 608 பேருக்கு தொற்று

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

    அவர் வெளியிட்ட தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா தொற்றிலிருந்து இன்று 181 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,454 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×