என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்: தேவகவுடா
Byமாலை மலர்14 July 2020 3:15 AM GMT (Updated: 14 July 2020 3:15 AM GMT)
கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று தேவகவுடா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :
ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க கர்நாடக அரசு, பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரம் ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன். அத்துடன் கர்நாடகம் முழுவதும் இந்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.
மக்களின் உடல் நலம் மிக முக்கியம். அதனால் வீட்டை வெளியே செல்பவர்கள், முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சானிடைசர் திரவம் மற்றும் சோப்பு போட்டு தூய்மைபடுத்தி கொள்ள வேண்டும். முக்கியமான பணிகள் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்.
கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தொகுப்பு உதவி திட்டத்தை அறிவித்தார். அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் பிரச்சினை கிளப்பலாம். தற்போது மக்களின் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம்.
மாநில அரசும் இந்த நோக்கத்தில் பணியாற்ற வேண்டும். நாங்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்கிறோம். மக்களின் உடல் ஆரோக்கியத்தில் யாரும் விளையாட வேண்டாம். இனிமேலாவது விழிப்படைந்து பணியாற்றுங்கள்.
இவ்வாறு தேவகவுடா தெரிவித்துள்ளார்.
ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க கர்நாடக அரசு, பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரம் ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன். அத்துடன் கர்நாடகம் முழுவதும் இந்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.
மக்களின் உடல் நலம் மிக முக்கியம். அதனால் வீட்டை வெளியே செல்பவர்கள், முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சானிடைசர் திரவம் மற்றும் சோப்பு போட்டு தூய்மைபடுத்தி கொள்ள வேண்டும். முக்கியமான பணிகள் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்.
கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தொகுப்பு உதவி திட்டத்தை அறிவித்தார். அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் பிரச்சினை கிளப்பலாம். தற்போது மக்களின் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம்.
மாநில அரசும் இந்த நோக்கத்தில் பணியாற்ற வேண்டும். நாங்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்கிறோம். மக்களின் உடல் ஆரோக்கியத்தில் யாரும் விளையாட வேண்டாம். இனிமேலாவது விழிப்படைந்து பணியாற்றுங்கள்.
இவ்வாறு தேவகவுடா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X