search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா
    X
    ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா

    ஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா தொற்று

    ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா, மனைவி மற்றும் மகளுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருமலை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று அரசியல் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. பதவியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் அவரது மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து துணை முதல்வர் அம்ஜத் பாஷா உள்பட குடும்பத்தினர் 3 பேரும் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×