என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா? - ராகுல் காந்தி
Byமாலை மலர்12 July 2020 11:05 AM GMT (Updated: 12 July 2020 11:05 AM GMT)
சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா என்ற கேள்வியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி:
மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்த 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியது என்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவிலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின்சக்தி திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், எனவே ஆசியாவிலேயே பெரியது ரேவா சூரிய மின்சக்தி திட்டமா? அல்லது பவகடா சூரியமின்சக்தி திட்டமா? என்பதற்கு மத்திய மின்சார துறை மந்திரி பதில் அளிக்க வேண்டும் என்று கோரி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவை இணைத்து ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், பிரதமர் மோடியை ‘அசத்யாகிரகி’ (பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பவர்) என்று குறிப்பிட்டு உள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்த 1,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியது என்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவிலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின்சக்தி திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், எனவே ஆசியாவிலேயே பெரியது ரேவா சூரிய மின்சக்தி திட்டமா? அல்லது பவகடா சூரியமின்சக்தி திட்டமா? என்பதற்கு மத்திய மின்சார துறை மந்திரி பதில் அளிக்க வேண்டும் என்று கோரி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவை இணைத்து ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், பிரதமர் மோடியை ‘அசத்யாகிரகி’ (பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பவர்) என்று குறிப்பிட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X