என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானை விட சீனாதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: சரத் பவார் சொல்கிறார்
Byமாலை மலர்12 July 2020 8:06 AM GMT (Updated: 12 July 2020 8:06 AM GMT)
நம் எல்லோரும் பாகிஸ்தான்தான் மிகப்பெரிய எதிரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் சீனாதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பாகிஸ்தான் உடன் நீணட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும், எல்லையில் பயங்கரவாத ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் ஆகியவற்றை இந்திய எதிர்கொள்கிறது.
தற்போது சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அண்டை நாடுகளாக நேபாளம் போன்றவற்றை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறது. லடாக் மோதலுக்குப்பின் இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவியது. தற்போது பேச்சுவார்த்தை மூலம் பதற்றம் குறைந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானை விட சீனாதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்ற தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத் பவார் கூறுகையில் ‘‘நாம் எதிரியை பற்றி சிந்திக்கும்போது, முதல் பெயராக நமது மனதில் தோன்றுவது பாகிஸ்தான்தான். ஆனால் பாகிஸ்தானை பற்றி மிகப்பெரிய அளவில் கவலைப்பட வேண்டியதில்லை. நீண்டகாலமாக சீனாவின் பலம், திட்டம், செயல் ஆகியவை இந்தியாவின் நலத்திற்கு எதிராகவே இருந்துள்ளது. இந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
நட்புணர்வு என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் இரு நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. பொருளாதாரத்தில் வலிமையாகுவதில் சீனா இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X