search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8.5 லட்சமாக உயர்வு

    இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்ந்துள்ளது.
    இந்தியாவில் ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

    இன்றைய காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,34,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 2,46,600 பேரும், தமிழகத்தில் 1,34,226 பேரும், டெல்லியில் 1,10,921 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×