search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவுக்கு பலி
    X
    கொரோனாவுக்கு பலி

    கர்நாடகத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு 57 பேர் பலி: புதிதாக 2,313 பேருக்கு வைரஸ் தொற்று

    கர்நாடகத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு ஒரே நாளில் 57 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 2,313 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,447 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    பெங்களூரு :

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் பேர் குணம் அடைந்து உள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 506 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்து 604 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா அதிகமாக பரவும் மாநிலங்களின் வரிசையில் தற்போது கர்நாடகம் சேர்ந்துள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பு தினசரி 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் கர்நாடக அரசு செய்வதறியாமல் திகைத்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் நாளுக்கு நாள் பரவல் முந்தைய நாள் பாதிப்பைவிட அதிகமாக பதிவாகி வருகிறது. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 2,313 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களுருவில் மட்டும் 1,447 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. பெங்களூருவில் வைரஸ் தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இது கர்நாடக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 30 ஆயிரத்து 614 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 2,313 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13 ஆயிரத்து 836 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 1,003 பேர் அடங்குவர்.

    புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 1,447 பேர், தட்சிண கன்னடாவில் 139 பேர், விஜயாப்புராவில் 89 பேர், பல்லாரியில் 66 பேர், கலபுரகியில் 58 பேர், யாதகிரி, மைசூருவில் தலா 51 பேர், தார்வாரில் 50 பேர், ஹாவேரியில் 42 பேர், உடுப்பியில் 34 பேர், உத்தரகன்னடா, குடகில் தலா 33 பேர், மண்டியாவில் 31 பேர், ராய்ச்சூரில் 25 பேர், ராமநகரில் 23 பேர், தாவணகெரேயில் 21 பேர், பீதர், கதக்கில் தலா 19 பேர், பெலகாவியில் 15 பேர், சிக்பள்ளாப்பூரில் 12 பேர், துமகூருவில் 10 பேர், கோலார், சாம்ராஜ்நகரில் தலா 9 பேர், கொப்பலில் 7 பேர், ஹாசன், சிவமொக்கா, பாகல்கோட்டையில் தலா 6 பேர், பெங்களூரு புறநகர், சிக்கமகளூருவில் தலா ஒருவர் உள்ளனர். சித்ரதுர்காவில் மட்டும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
    Next Story
    ×