search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உ.பி.யில் ஆசிரமத்தில் படிக்கும் சிறார்களுக்கு பாலியல் தொல்லை: சாமியார் கைது

    உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் கவுடியா மாத் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் செய்து செய்யப்பட்டுள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சுவாமி பக்தி பூஷண் மகாராஜ் என்ற சாமியார் கவுடியா மாத் என்ற பெயில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு 15 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் படித்து வருகிறார்கள். பெரும்பாலான சிறார்கள் திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    நேற்று முன்தினம் முசாபர்நகர் மாவட்ட குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு, சிறார்களை கொடுமைப்படுத்தப்படுவதாக புகார் வந்தது. இதனடிப்பையில் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது 8 சிறார்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நான்கு பேர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரமத்தின் மானேஜரும் போலீஸ் காவலில் இருப்பதாக கூறப்படுகிறது.

    சிறார்கள் படிப்பதற்காக ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அவர்கள் சொல்வதை சிறார்கள் சரியாக செய்யவில்லை என்றால், சாமியார் அடித்து துன்புறுத்துவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து சிறார்களுக்கும் 12 வயது சிறுவன் சமைப்பதும், அங்குள்ள கால்நடைகளுக்கு இவர்கள்தான் அருகில் உள்ள காட்டில் இருந்து தீவனம் கொண்டு வருவதாகவும் சிறார்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×