என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக தலைவரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் செயல் கோழைத்தனமானது - ஜேபி நட்டா
Byமாலை மலர்8 July 2020 8:48 PM GMT (Updated: 8 July 2020 9:07 PM GMT)
பா.ஜ.க. தலைவர் குடும்பத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தின் பா.ஜ.க தலைவராக இருந்தவர் ஷேக் வாசிம் பாரி.
பந்திபோராவில் உள்ள தனது கடையில் அப்பா மற்றும் சகோதரர் ஆகியோருடன் இருக்கும்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் ஷேக் வாசிம் பாரி உள்பட 3 பேரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 8 போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் குடும்பத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜே பி நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷேக் வாசிம் பாரி குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலால் அவர்களை நாம் இழந்துள்ளோம். இது கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களுக்கு கட்சி எப்போதும் துணைநிற்கும். அவர்களின் தியாகம் வீணாகாது என உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், சுட்டுக் கொல்லப்பட்ட காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X