என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாஜ்மஹால் திறப்பு இல்லை: ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் நடவடிக்கை
Byமாலை மலர்6 July 2020 2:58 AM GMT (Updated: 6 July 2020 2:58 AM GMT)
தாஜ்மஹால் பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு கடந்த 1-ந்தேதியில் இருந்து ஊரடங்குடன் கூடிய அன்லாக்-2-ஐ அறிவித்தது. அப்போது நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் புராதான இடங்கள் வருகிற ஜூலை 6-ந்தேதி (இன்று) முதல் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும். தாஜ்மஹால் உள்ள தூண்கள் உள்பட எதையும் தொடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஆக்ராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தாஜ்மஹால் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்ராவில் உள்ள புராதான இடங்களும் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வு அறிவிப்புக்குப்பின் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X