search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் இன்று மேலும் 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இன்று மேலும் 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஷைலஜா கூறுகையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,429 ஆக உயர்ந்துள்ளது.  வெளிநாடுகளில் இருந்து வந்த 117, வெளிமாநிலங்களில் இருந்த வந்த 57 பேர் உள்பட 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது கேரள மருத்துவமனைகளில் 2,228 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×