search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 மாவோயிஸ்டுகள் கொலை
    X
    4 மாவோயிஸ்டுகள் கொலை

    ஒடிசாவில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

    ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
    கந்தமால் மாவட்டதின் துமுதிபந்த் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக மோவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் மாவட்ட தன்னார்வ போலீஸ் படை  ஆகியவற்றுடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது நடைபெற்ற சண்டையில் நான்கு மாவோஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் பன்ஸ்தாரா-குமுசுர்-நாகபாலி குரூப்பை சேர்ந்தவர்கள் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×