என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கு கொரோனாவா? வெளியான பரிசோதனை முடிவு
Byமாலை மலர்4 July 2020 7:02 PM GMT (Updated: 4 July 2020 7:02 PM GMT)
பீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்ட மேலவை தலைவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து முதல்மந்திரியும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியான நிதிஷ் குமார் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் நாராயன் சிங்கிற்கு கொரோனா வைரஸ் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முதல் மந்திரியான நிதிஷ் குமாருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால், முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
பரிசோதனையில் நிதிஷ் குமாருக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என முடிவு வெளியாகியுள்ளது. இதனால் அவர் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்.
இருந்தபோதிலும், தன்னுடனும், சட்டமன்ற மேலவை தலைவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நிதிஷ் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X