search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்
    X
    பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - இந்தியா பதிலடி

    ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
    ஸ்ரீநகர்:
     
    ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், இன்று இரவு 7.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் டேக்வார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×