search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடித்து தள்ளப்பட்ட ரவுடி விகாஸ் துபே வீடு
    X
    இடித்து தள்ளப்பட்ட ரவுடி விகாஸ் துபே வீடு

    கான்பூர் ரவுடி விகாஷ் துபே வீட்டை இடித்து தரைமட்டமாக்கியது மாவட்ட நிர்வாகம்

    உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ரவுடியின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.
    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கான்பூர் அருகே உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் நேற்று சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். 

    போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில், தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு இன்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு இடிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×