என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான், மிசோரமில் லேசான நிலநடுக்கம்
Byமாலை மலர்4 July 2020 3:43 AM GMT (Updated: 4 July 2020 3:43 AM GMT)
ராஜஸ்தான், மிசோரமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி :
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று மதியம் 2.35 மணி அளவில் மிசோரம் மாநிலத்தின் சம்பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகள் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நடுக்கம் பூமிக்கு அடியில் 52 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நிலநடுக்கங்களின் போதும் உயிர் இழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று மதியம் 2.35 மணி அளவில் மிசோரம் மாநிலத்தின் சம்பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகள் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நடுக்கம் பூமிக்கு அடியில் 52 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நிலநடுக்கங்களின் போதும் உயிர் இழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X