என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Byமாலை மலர்3 July 2020 2:25 PM GMT (Updated: 3 July 2020 2:25 PM GMT)
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஜூலை 26-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிக்கப்படாமல் இருக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நீட் தேர்வு வருகிற 26-ந்தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 20 ஆயிரத்தை கடக்கும் நிலை உள்ளது. இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் ஜூலை 26-ல் நடக்க இருந்த நீட் தேர்வு செப்டம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதேபோல் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X