search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டம்
    X
    அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டம்

    உ.பி.யில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- யோகி ஆதித்யநாத்திடம் அமித் ஷா வலியுறுத்தல்

    உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள அரியானா, உத்தர பிரதேச பகுதிகளை உள்ளடக்கிய தேசிய தலைநகர பிராந்தியத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது அதிக பரிசோதனைகளை செய்து, பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே மருத்துவமனைகளில் சேர்த்து உயிரிழப்பு விகிதங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    குறிப்பாக, உ.பி.யில் குறைந்த அளவில் பரிசோதனை செய்யப்படுவது குறித்து பலரும் கேள்வி எழுப்புவதால், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி அமித் ஷா கூறியுள்ளார்.

    யோகி ஆதித்யநாத்

    இந்த மூன்று மாநிலங்களில் உத்தர பிரதேசத்தில்தான் குறைந்த அளவிலான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 10 லட்சம் பேரில் 72 பேருக்கும், காசியாபாத்தில் 78 பேருக்கு மட்டும் ஏன் பரிசோதனை நடத்தப்படுகிறது? என இக்கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. டெல்லியில் 10 லட்சம் பேரில் 679 பேருக்கும், குர்கானில் 482 பேருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

    ரிக்சா ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள் என அதிகம் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நபர்களுக்கு பரிசோதனையை விரைவுபடுத்தும்படி ஏற்கெனவே அறிவுறுத்தியிருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 
    Next Story
    ×