search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சம்பவம் நடைபெற்ற இடம்.
    X
    சம்பவம் நடைபெற்ற இடம்.

    ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி உள்பட 8 போலீசார் பலி- உ.பி.யில் பயங்கரம்

    உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே  உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த  விகாஸ் துபேயை தேடி  டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    ரவுடிகள் சுட்டதில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  மேலும், சில போலீசார் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரவுடிகள் தாக்குதலில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டது  கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்விடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×