search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்பஜன் சிங்
    X
    ஹர்பஜன் சிங்

    உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவத்திற்கு ஹர்பஜன் கண்டனம்

    அறந்தாங்கி அருகே சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஹர்பஜன் சிங் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தமிழில் டுவிட் செய்துள்ளார்.

    அறந்தாங்கி சிறுமி சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா #JusticeforJayapriya’’ என டுவிட் செய்துள்ளார்.
    Next Story
    ×