search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல் தாக்கி பலி
    X
    மின்னல் தாக்கி பலி

    பீகாரில் தொடரும் சோகம் - ஒரே நாளில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு

    பீகாரில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இடி, மின்னலுக்கு 20 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

    இந்நிலையில், பீகாரில் இன்று ஒரே நாளில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
     
    ஏற்கனவே, கடந்த வாரம் பீகாரில் இடி, மின்னல் தாக்கி 100க்கு மேற்பட்டோர் பலியானது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×