search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவி சங்கர் பிரசாத்
    X
    ரவி சங்கர் பிரசாத்

    இந்தியாவால் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ கூட செய்ய முடியும்: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

    சீனாவின் முக்கியமான 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ கூட செய்ய முடியும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
    லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீன ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலையடுத்து, இருநாட்டு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இந்த நிலையில், சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் ‘‘இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக, நாட்டு மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பிற்காக நாம் 59 செயலிகளை தடை செய்துள்ளோம்.

    நமது எல்லையை மீது கண் வைப்பவர்களை எப்படி எதிர்கொள்வது, நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பது என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவல் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ கூட செய்ய முடியும்’’ என்றார்.
    Next Story
    ×