search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்
    X
    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது- 3.59 லட்சம் பேர் குணமடைந்தனர்

    இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 604641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 434 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17834 ஆக உயர்ந்துள்ளது. 

    இதுவரை 359860 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11881 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 226947 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 94049 பேருக்கும், டெல்லியில் 89802 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×