search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் ஊழியர்கள்
    X
    இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் ஊழியர்கள்

    இந்தியாவில் 5.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 17400 ஆக உயர்வு

    இந்தியாவில் 5.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3.47 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்திலேயே உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 585493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 507 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17400 ஆக உயர்ந்துள்ளது. 

    இதுவரை 347979 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 13157 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 220114 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 174761 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 90167 பேருக்கும், டெல்லியில் 87360 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×