என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது: முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம்
Byமாலை மலர்30 Jun 2020 4:06 AM GMT (Updated: 30 Jun 2020 4:06 AM GMT)
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்த சம்பவம் டெல்லி நிர்பயா கற்பழிப்பு வழக்கை விட கொடூரமானது என ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது போல சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையகளுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமெனவும் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தில் நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுளைத்தது போலவே, சாத்தான்குளம் சம்பவத்திலும் பென்னிக்சின் ஆசன வாயில் தடியை சொருகிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது நிர்பயா சம்பவம் தனிநபர் அதாவது பொது மக்களில் சிலரால் செய்யப்பட்டது. ஆனால் இங்கே சட்டத்தை நிலை நிறுத்துவதையும் குடிமக்களை பாதுகாப்பதையும் கடமையாகக் கொண்ட போலீஸ்காரர்களால் இது செய்யப்பட்டுள்ளது.
குற்றங்கள் சாதாரண மக்களால் செய்யப்பட்டால், சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் காவல்துறையினரால் குற்றம் செய்யப்பட்டால், அவர்கள் கடமைகளுக்கு முற்றிலும் முரணான செயலை செய்தால், அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டால், சாத்தான்குளம் வழக்கிலும் சம்பந்தப்பட்ட போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது போல சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையகளுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமெனவும் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தில் நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுளைத்தது போலவே, சாத்தான்குளம் சம்பவத்திலும் பென்னிக்சின் ஆசன வாயில் தடியை சொருகிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது நிர்பயா சம்பவம் தனிநபர் அதாவது பொது மக்களில் சிலரால் செய்யப்பட்டது. ஆனால் இங்கே சட்டத்தை நிலை நிறுத்துவதையும் குடிமக்களை பாதுகாப்பதையும் கடமையாகக் கொண்ட போலீஸ்காரர்களால் இது செய்யப்பட்டுள்ளது.
குற்றங்கள் சாதாரண மக்களால் செய்யப்பட்டால், சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் காவல்துறையினரால் குற்றம் செய்யப்பட்டால், அவர்கள் கடமைகளுக்கு முற்றிலும் முரணான செயலை செய்தால், அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டால், சாத்தான்குளம் வழக்கிலும் சம்பந்தப்பட்ட போலீசார் குற்றவாளிகளாக இருந்தால் தூக்கிலிடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X