என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் படம் - 3 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்29 Jun 2020 11:21 AM GMT (Updated: 29 Jun 2020 11:21 AM GMT)
அடுத்தவரின் பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் படம் இருப்பதை கண்ட கணவர் 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை:
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலசோப்ராவில் உள்ள பபுல் பாடாவை சேர்ந்தவர் கைலாஷ் பர்மார்(வயது35). இவரை விட்டு கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். கைலாஷ் பர்மார் தனது 12 வயது மகன், 8 மற்றும் 3 வயது மகள்களுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பூட்டிய வீட்டுக்குள் கைலாஷ் பர்மார் தனது குழந்தைகள் 3 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 3 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரிந்து சென்ற தனது மனைவியின் படம் வேறு ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்ததை கண்டு விரக்தி அடைந்ததால், 3 குழந்தைகளை கொடூரமாக கொன்று கைலாஷ் பர்மாரும் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலசோப்ராவில் உள்ள பபுல் பாடாவை சேர்ந்தவர் கைலாஷ் பர்மார்(வயது35). இவரை விட்டு கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். கைலாஷ் பர்மார் தனது 12 வயது மகன், 8 மற்றும் 3 வயது மகள்களுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பூட்டிய வீட்டுக்குள் கைலாஷ் பர்மார் தனது குழந்தைகள் 3 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 3 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரிந்து சென்ற தனது மனைவியின் படம் வேறு ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்ததை கண்டு விரக்தி அடைந்ததால், 3 குழந்தைகளை கொடூரமாக கொன்று கைலாஷ் பர்மாரும் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X