என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி - கெஜ்ரிவால்
Byமாலை மலர்29 Jun 2020 7:18 AM GMT (Updated: 29 Jun 2020 7:18 AM GMT)
கொரோனாவால் உயிரிழந்த டெல்லி அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பிளாஸ்மா சிகிச்சை, கணக்கெடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் ஆகிய 5 ஆயுதங்கள் உதவுவதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பிளாஸ்மா சிகிச்சை, கணக்கெடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் ஆகிய 5 ஆயுதங்கள் உதவுவதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பணியாற்றிய மயக்க மருந்து நிபுணர், மூத்த மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர் கெஜ்ரிவால் , கொரோனாவால் உயிரிழந்த டெல்லி அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தலைநகர் டெல்லியில் விரைவில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும் எனவும், கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர் தாமாக முன் வந்து பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X