என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- அண்டை நாடுகளிலும் நில அதிர்வு
Byமாலை மலர்27 Jun 2020 10:15 AM GMT (Updated: 27 Jun 2020 10:15 AM GMT)
ஜம்மு காஷ்மீரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹன்லே பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹன்லேயில் இருந்து வடகிழக்கில் 332 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டுமானங்கள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X