என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவத்தில் சாதி, பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் பிரதமர் மோடி: சிவசேனா தாக்கு
Byமாலை மலர்27 Jun 2020 3:12 AM GMT (Updated: 27 Jun 2020 3:12 AM GMT)
பீகார் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களின் வீரத்தில் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் என சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை :
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தநிலையில், பீகாரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாகுபாடு காட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீனா உடனான சண்டையில் பீகாரை சேர்ந்த ராணுவ படைப்பிரிவின் வீரத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகிறார். நாடு எல்லையில் நெருக்கடியை சந்தித்து வரும் போது மஹர், மராத்தா, ராஜ்புத், சீக்கியர்கள், கோர்க்கா, டோக்ரா ஆகிய படைப்பிரிவினர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகையிலை மென்று கொண்டிருந்தார்களா?
மராட்டியத்தை சேர்ந்த வீரர் சுனில் காலே என்பவர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணம் அடைந்தார். பீகாரில் தேர்தல் வருவதால் இந்திய ராணுவத்தில் சாதி மற்றும் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அரசியல் நோய், கொரோனா வைரசை விடவும் இது மோசமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தநிலையில், பீகாரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாகுபாடு காட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீனா உடனான சண்டையில் பீகாரை சேர்ந்த ராணுவ படைப்பிரிவின் வீரத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகிறார். நாடு எல்லையில் நெருக்கடியை சந்தித்து வரும் போது மஹர், மராத்தா, ராஜ்புத், சீக்கியர்கள், கோர்க்கா, டோக்ரா ஆகிய படைப்பிரிவினர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகையிலை மென்று கொண்டிருந்தார்களா?
மராட்டியத்தை சேர்ந்த வீரர் சுனில் காலே என்பவர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணம் அடைந்தார். பீகாரில் தேர்தல் வருவதால் இந்திய ராணுவத்தில் சாதி மற்றும் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு அரசியல் நோய், கொரோனா வைரசை விடவும் இது மோசமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X