என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு
Byமாலை மலர்26 Jun 2020 1:05 PM GMT (Updated: 26 Jun 2020 1:05 PM GMT)
எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு 170 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
அண்டை நாடானா, சீனா அடிக்கடி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதால் இந்த பகுதியில் பணிபுரிபவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், லடாக்கில் சாலை போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் 100 சதவிகிதம் முதல் 170 சதவிகிதம் வரை உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பள உயர்வு ஜூன் 1- ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. சாதாரண டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு ரூ. 16,770 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சம்பளம் ரூ. 41,440 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ.28,000 தான் சம்பளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 25,700 சம்பளம் பெற்ற அக்கவுண்டன்டுக்கு இனிமேல் ரூ.47,360 சம்பளமாக வழங்கப்படும்.
சிவில் என்ஜினீயருக்கு ரூ. 30,000 சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளம் அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.60,000 ஆக்கப்பட்டுள்ளது. மேலாளருக்கு ரூ.50,000லிருந்து ரூ. 1,12,000 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனியர் மேலாளர்களுக்கு ரூ.55,000 என இருந்த சம்பளம் ரூ.1,23,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ரூ.5 லட்சத்துக்கான ஹெல்த் இன்சூரன்ஸ், ரூ. 10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு, போக்குவரத்து அலவென்ஸ்கள் தனி.
இந்தியாவிலேயே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பகுதிகள் என சில பகுதிகளை அரசு வரையறுத்துள்ளது. அதில் முதல் பிரிவில் அசாம், மேகலாயா, சிக்கிம், திரிபுரா, உத்ரகாண்ட் உள்ளன. அடுத்த இடத்தில் அருணாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஆபத்து நிறைந்த பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள லடாக் பகுதி மூன்றாவது பிரிவில் உள்ளது. லடாக்கில் சமீபத்தில் இந்திய ராணுவம் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இதனால், கோபமடைந்த சீனா, எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
அண்டை நாடானா, சீனா அடிக்கடி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதால் இந்த பகுதியில் பணிபுரிபவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், லடாக்கில் சாலை போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் 100 சதவிகிதம் முதல் 170 சதவிகிதம் வரை உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பள உயர்வு ஜூன் 1- ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. சாதாரண டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு ரூ. 16,770 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சம்பளம் ரூ. 41,440 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ.28,000 தான் சம்பளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 25,700 சம்பளம் பெற்ற அக்கவுண்டன்டுக்கு இனிமேல் ரூ.47,360 சம்பளமாக வழங்கப்படும்.
சிவில் என்ஜினீயருக்கு ரூ. 30,000 சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளம் அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.60,000 ஆக்கப்பட்டுள்ளது. மேலாளருக்கு ரூ.50,000லிருந்து ரூ. 1,12,000 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனியர் மேலாளர்களுக்கு ரூ.55,000 என இருந்த சம்பளம் ரூ.1,23,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ரூ.5 லட்சத்துக்கான ஹெல்த் இன்சூரன்ஸ், ரூ. 10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு, போக்குவரத்து அலவென்ஸ்கள் தனி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X