என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சியில் மூச்சுத் திணறும் மூத்த தலைவர்கள்- அமித் ஷா தாக்கு
Byமாலை மலர்25 Jun 2020 7:30 AM GMT (Updated: 25 Jun 2020 7:30 AM GMT)
காங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை என்றும், மூத்த தலைவர்கள் பலர் மூச்சு திணறி வருவதாகவும் மத்திய மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் கட்சி மற்றும் தேசிய நலனை விட குறிப்பிட்ட குடும்பத்தின் நலன் தான் அக்கட்சிக்கு முக்கியமானதாக இருந்தது எனவும் சாடியுள்ளார்.
‘இந்த மோசமான நிலை, 45 ஆண்டுகளை கடந்தும் கூட, இன்றும் காங்கிரஸ் கட்சியில் நிலவுகிறது. குடும்ப வாரிசுகளை தவிர மற்ற தலைவர்கள் வெளிப்படையாக பேச முடியவில்லை. மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கூட, சில தலைவர்கள் சில பிரச்சனைகளை எழுப்பிய போது, அவர்களை சிலர் கூச்சலிட்டு அடக்கி உள்ளனர். செய்தித் தொடர்பாளர் சத்தமே இல்லாமல் நீக்கப்பட்டார். காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலர் மூச்சு திணறி வருகின்றனர் என்பது சோகமான உண்மை’ எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X