search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி
    X
    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

    மிசோரம் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

    மிசோரம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், இன்று காலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தின் சம்பாய் அருகே இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பாயில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 31 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகாக பதிவாகியிருந்தது. 

    நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இதேபோல் மிசோரம் மாநிலத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×