search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வீரர்கள் (கோப்பு படம்)
    X
    தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வீரர்கள் (கோப்பு படம்)

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் சிக்கினர்

    ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் பிடிபட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அவ்வகையில், சோபூர் மாவட்டம் போத்கா முகாம் மற்றும் சான்போரா அதூரா ஆகிய இடங்களில் போலீசார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 

    ஒரே சமயத்தில் நடந்த இந்த தேடுதல் வேட்டையின்போது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×