என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் பதவி ஏற்பு விழா 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: டி.கே.சிவக்குமார் தகவல்
Byமாலை மலர்24 Jun 2020 3:16 AM GMT (Updated: 24 Jun 2020 3:16 AM GMT)
வருகிற 2-ந் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பு விழா, கர்நாடகத்தில் 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் வருகிற 2-ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சியின் புதிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
வருகிற 2-ந் தேதி நான் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சி நடை பெறும்போது பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
பேஸ்புக், டுவிட்டர், செய்தி தொலைக்காட்சி, ஜூம் செயலி போன்றவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அன்று 10 லட்சம் தொண்டர்கள் இந்த விழாவில் பங்கேற்று உறுதி மொழி ஏற்பார்கள். கட்சி தலைவராக நான் இதை செய்யவில்லை. தலைவர் பதவி என்பது ஒரு பொறுப்பு. கட்சி தொண்டர்களுடன் ஒன்று சேர்ந்து நான் எனது பணியை மேற்கொள்ள உள்ளேன்.
தொண்டர்கள் தான் காங்கிரஸ் சக்தி. தொண்டர்கள் இல்லாவிட்டால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது. பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை நான் மேற்கொள்வேன். ஒரு தலைவரை முன்னிறுத்தி பேசுவதை தவிர்த்துவிட்டு, கட்சி புகழ் பாடுவதை நான் உறுதி செய்வேன். தொண்டர்களின் குரல், கட்சியின் குரலாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் வருகிற 2-ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சியின் புதிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
வருகிற 2-ந் தேதி நான் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 7,800 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சி நடை பெறும்போது பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
பேஸ்புக், டுவிட்டர், செய்தி தொலைக்காட்சி, ஜூம் செயலி போன்றவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அன்று 10 லட்சம் தொண்டர்கள் இந்த விழாவில் பங்கேற்று உறுதி மொழி ஏற்பார்கள். கட்சி தலைவராக நான் இதை செய்யவில்லை. தலைவர் பதவி என்பது ஒரு பொறுப்பு. கட்சி தொண்டர்களுடன் ஒன்று சேர்ந்து நான் எனது பணியை மேற்கொள்ள உள்ளேன்.
தொண்டர்கள் தான் காங்கிரஸ் சக்தி. தொண்டர்கள் இல்லாவிட்டால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது. பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை நான் மேற்கொள்வேன். ஒரு தலைவரை முன்னிறுத்தி பேசுவதை தவிர்த்துவிட்டு, கட்சி புகழ் பாடுவதை நான் உறுதி செய்வேன். தொண்டர்களின் குரல், கட்சியின் குரலாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X