என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனகபுராவில் மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு: டி.கே.சிவக்குமார் விளக்கம்
Byமாலை மலர்23 Jun 2020 3:55 AM GMT (Updated: 23 Jun 2020 3:55 AM GMT)
கனகபுரா எனது தொகுதி. அங்கு நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். மக்களின் நலன் கருதி, கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க அங்கு மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கனகபுராவில் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவை டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி அறிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், ஊரடங்கு குறித்து முடிவு எடுக்க டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கனகபுரா எனது தொகுதி. அங்கு நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். மக்களின் நலன் கருதி, கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க அங்கு மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம். இது எனது கடமை. அதை செய்துள்ளேன். துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெரிய மனிதர். அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை.
பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவர்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
கனகபுராவில் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவை டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி அறிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், ஊரடங்கு குறித்து முடிவு எடுக்க டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கனகபுரா எனது தொகுதி. அங்கு நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். மக்களின் நலன் கருதி, கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க அங்கு மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம். இது எனது கடமை. அதை செய்துள்ளேன். துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெரிய மனிதர். அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை.
பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவர்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X