search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    கனகபுராவில் மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு: டி.கே.சிவக்குமார் விளக்கம்

    கனகபுரா எனது தொகுதி. அங்கு நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். மக்களின் நலன் கருதி, கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க அங்கு மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கனகபுராவில் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவை டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி அறிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், ஊரடங்கு குறித்து முடிவு எடுக்க டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

    அதற்கு பதிலளித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கனகபுரா எனது தொகுதி. அங்கு நான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். மக்களின் நலன் கருதி, கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க அங்கு மக்களின் விருப்பப்படி சுய ஊரடங்கு முடிவை எடுத்துள்ளோம். இது எனது கடமை. அதை செய்துள்ளேன். துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெரிய மனிதர். அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை.

    பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவர்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×