search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    விநாயகா் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிரமாண்ட சிலை வைக்க வேண்டாம்: உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

    விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிரமாண்ட சிலை வைக்க வேண்டாம் என்று மண்டல்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.
    மும்பை :

    மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்குகிறது. எனினும் கொரோனா பிரச்சினை காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கேள்விக்குறி ஆகி உள்ளது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாடுமாறு சமீபத்தில் மண்டல் நிர்வாகிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.

    இதற்கு மத்தியில் மும்பையில் உள்ள பிரபல கணபதி மண்டல்களை சேர்ந்த பிரநிதிகள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்பு குறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா பிரச்சினைக்கு இடையே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து கணபதி மண்டல் பிரதிநிதிகள் முதல்-மந்திரியிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது முதல்-மந்திரி சுத்தம், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற மண்டல்களுக்கு உத்தரவிட்டார். மேலும் வழிபாட்டுக்காக உயரம் குறைந்த பிரமாண்டம் இல்லாத சிலைகளை வைக்கவும், குறைந்த இடத்தில் பந்தல் அமைக்கவும் அறிவுறுத்தினார். இதேபோல மண்டல்களை சேர்ந்தவர்கள் மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் முதல்-மந்திரி கூறினார்.

    இதேேபால விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற தயாராக இருப்பதாக மண்டல் நிர்வாகிகள் சம்மதித்து உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×