என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தரமான முக கவசம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி
Byமாலை மலர்22 Jun 2020 3:12 AM GMT (Updated: 22 Jun 2020 3:12 AM GMT)
பெங்களூரு சிக்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபரிடம் தரமான முக கவசம் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
பெங்களூரு :
பெங்களூரு சிக்பேட்டையை சேர்ந்தவர் வசந்த், தொழில்அதிபர். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் முக கவசங்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வசந்தும் முக கவசங்களை வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கிடையில், சமீபத்தில் வீரேஷ் மற்றும் மதுகவுடா ஆகிய 2 பேருடன் வசந்திற்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தரமான மற்றும் பிரபல நிறுவனங்களின் முக கவசங்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக வசந்திடம் கூறியுள்ளனர். இதற்கு வசந்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக ராஜராஜேசுவரிநகரில் வைத்து ரூ.50 லட்சத்தை வீரேசிடம் வசந்த் கொடுத்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் வீரேஷ் கொடுத்த சில முக கவசங்கள் வசந்திற்கு பிடித்துவிட்டது.
அடுத்த ஓரிரு நாட்களில் முக கவசங்கள் வாங்க மேலும் ரூ.50 லட்சத்தை வீரேஷ் வங்கி கணக்குக்கு வசந்த் அனுப்பி வைத்தார். ரூ.1 கோடிக்கு முக கவசங்கள் தருவதாக கூறிய வீரேஷ், மதுகவுடா ஆகியோர் முக கவசங்களை கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை வசந்தால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்கள் 2 பேரும் ஒரு தொலைகாட்சி சேனலில் பணியாற்றியது வசந்திற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜராஜேசுவரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரேஷ், மதுகவுடாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு சிக்பேட்டையை சேர்ந்தவர் வசந்த், தொழில்அதிபர். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் முக கவசங்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வசந்தும் முக கவசங்களை வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கிடையில், சமீபத்தில் வீரேஷ் மற்றும் மதுகவுடா ஆகிய 2 பேருடன் வசந்திற்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தரமான மற்றும் பிரபல நிறுவனங்களின் முக கவசங்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக வசந்திடம் கூறியுள்ளனர். இதற்கு வசந்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக ராஜராஜேசுவரிநகரில் வைத்து ரூ.50 லட்சத்தை வீரேசிடம் வசந்த் கொடுத்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் வீரேஷ் கொடுத்த சில முக கவசங்கள் வசந்திற்கு பிடித்துவிட்டது.
அடுத்த ஓரிரு நாட்களில் முக கவசங்கள் வாங்க மேலும் ரூ.50 லட்சத்தை வீரேஷ் வங்கி கணக்குக்கு வசந்த் அனுப்பி வைத்தார். ரூ.1 கோடிக்கு முக கவசங்கள் தருவதாக கூறிய வீரேஷ், மதுகவுடா ஆகியோர் முக கவசங்களை கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை வசந்தால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்கள் 2 பேரும் ஒரு தொலைகாட்சி சேனலில் பணியாற்றியது வசந்திற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜராஜேசுவரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரேஷ், மதுகவுடாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X