என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போதிய இருப்பு உள்ளதால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்
Byமாலை மலர்20 Jun 2020 7:45 AM GMT (Updated: 20 Jun 2020 7:45 AM GMT)
உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப, உபரி இருப்பு உள்ளதால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா சிகிச்சைக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்கள் பெரும் உதவியாக உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளின் உற்பத்தித் திறன் 3 மடங்காக அதிகரிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு 30 கோடி மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின், உள்நாட்டுத் தேவையை விட உபரி மாத்திரைகளை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருந்தியல் துறை பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து வெளி வர்த்தகத்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தடை நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மருந்தியல் துறை, வெளியுறவுத்துறை, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் குழு இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா சிகிச்சைக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்கள் பெரும் உதவியாக உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் அது தொடர்பான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளின் உற்பத்தித் திறன் 3 மடங்காக அதிகரிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு 30 கோடி மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின், உள்நாட்டுத் தேவையை விட உபரி மாத்திரைகளை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மருந்தியல் துறை பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து வெளி வர்த்தகத்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தடை நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மருந்தியல் துறை, வெளியுறவுத்துறை, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் குழு இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X