search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி கோவிலில் மேலும் 3000 பக்தர்கள் கூடுதலாக தரிசனத்திற்கு அனுமதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய கூடுதலாக 3000 பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
    திருப்பதி:

    திருப்பதியில் கடந்த 11-ந்தேதி முதல் ஏழுமலையான் கோவிலுக்குள் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    300 ரூபாய் சிறப்பு தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், இலவச தரிசன வரிசையில் 3000 பக்தர்களும், விஐபி தரிசன வரிசையில் 750 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கூடுதலாக 3000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக தினசரி 9,750 பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×