என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொண்டர்களுக்கு வழிகாட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனை தேவை: டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்19 Jun 2020 3:50 AM GMT (Updated: 19 Jun 2020 3:50 AM GMT)
கர்நாடக மேல்-சபை என்றால், அது மூத்தவர்களின் சபை என்று அழைக்கப்படுகிறது. தொண்டர்களுக்கு வழிகாட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனை தேவை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபை என்றால், அது மூத்தவர்களின் சபை என்று அழைக்கப்படுகிறது. நசீர் அகமது, பி.கே.ஹரிபிரசாத் ஆகிய 2 பேரையும் நாங்கள் ஒருமனதாக முடிவு செய்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம். எங்கள் கட்சியில் டிக்கெட் பெற பலத்த போட்டி இருந்தது. எங்களுக்கும், தொண்டர்களுக்கும் வழி காட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைகள் தேவை.
அதற்காக தான் இவர்கள் 2 பேரையும் மேல்-சபைக்கு அனுப்புகிறோம். இவர்கள் 2 பேர் கட்சியில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள். மூத்தவர்கள் உள்ள சபைக்கு, மூத்தவர்கள் செல்ல வேண்டியது அவசியம். அவர்கள் 2 பேரும் மாணவர் பருவத்தில் இருந்தே காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தேசிய அளவில் பல பொறுப்புகளை வகித்துள்ளனர். அதனால் அவர்கள் 2 பேருக்கும் எங்கள் கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதே காரணத்தால் தான் மாநிலங்களவைக்கும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அனுப்பி இருக்கிறோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபை என்றால், அது மூத்தவர்களின் சபை என்று அழைக்கப்படுகிறது. நசீர் அகமது, பி.கே.ஹரிபிரசாத் ஆகிய 2 பேரையும் நாங்கள் ஒருமனதாக முடிவு செய்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம். எங்கள் கட்சியில் டிக்கெட் பெற பலத்த போட்டி இருந்தது. எங்களுக்கும், தொண்டர்களுக்கும் வழி காட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைகள் தேவை.
அதற்காக தான் இவர்கள் 2 பேரையும் மேல்-சபைக்கு அனுப்புகிறோம். இவர்கள் 2 பேர் கட்சியில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள். மூத்தவர்கள் உள்ள சபைக்கு, மூத்தவர்கள் செல்ல வேண்டியது அவசியம். அவர்கள் 2 பேரும் மாணவர் பருவத்தில் இருந்தே காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தேசிய அளவில் பல பொறுப்புகளை வகித்துள்ளனர். அதனால் அவர்கள் 2 பேருக்கும் எங்கள் கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதே காரணத்தால் தான் மாநிலங்களவைக்கும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அனுப்பி இருக்கிறோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X