என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே மோதல்
Byமாலை மலர்16 Jun 2020 12:53 AM GMT (Updated: 16 Jun 2020 12:53 AM GMT)
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை முதல் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
ஜம்மு:
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள துர்வங்கம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மோதல் நடைபெறும் பகுதியில் எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
இது குறித்து காஷ்மீர் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் சோபியான் பகுதியில் என்கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X