search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ஆர்எஸ் பாரதியின் ஜாமீன் விவகாரம்- ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மே மாதம் 23-ந்தேதி தமிழக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் சென்னை ஐகோர்ட்டு அன்றே அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு காணொலி அமர்வு மூலம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×