என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் பற்றி எரியும் எண்ணெய் வயல்- 1600 குடும்பங்கள் வெளியேற்றம்
Byமாலை மலர்10 Jun 2020 5:46 AM GMT (Updated: 10 Jun 2020 5:46 AM GMT)
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் வயலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சுற்று வட்டாரங்களில் வசித்த 1600 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
கவுகாத்தி:
தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சுமார் 1600 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் பல்வேறு வீடுகள் தீயில் கருகின. அருகில் உள்ள கிராமங்களுக்கும் தீ பரவிய நிலையல், இதுவரை 6 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓஎன்ஜிசியின் ஒரு தீயணைப்பு வீரரும் காயமடைந்துள்ளார்.
இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. விபத்தால் இவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வயல் வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் எரிவாயுவின் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள், நேற்று இந்த எண்ணெய் வயலை பார்வையிட்டு எரிவாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எண்ணெய் வயலில் இருந்த அனைவரும் வெளியேறினர்.
தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சுமார் 1600 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் பல்வேறு வீடுகள் தீயில் கருகின. அருகில் உள்ள கிராமங்களுக்கும் தீ பரவிய நிலையல், இதுவரை 6 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓஎன்ஜிசியின் ஒரு தீயணைப்பு வீரரும் காயமடைந்துள்ளார்.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எரிவாயுக் கசிவை சரி செய்யுமாறு மத்திய அரசுக்கு மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கோரிக்கை வைத்துள்ளார். விபத்து குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டு வருகின்றனர். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டிருக்கும் எண்ணெய் வயல், தலைநகர் கவுகாத்தியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. தீ விபத்து தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.#WATCH Fire flames continue to erupt from the gas well of Oil India Ltd at Baghjan in Tinsukia district, Assam. A team of State Disaster Response Force (SDRF) and fire engines are present at the spot. pic.twitter.com/PgtAC06RTP
— ANI (@ANI) June 10, 2020
இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. விபத்தால் இவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வயல் வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களிலும் எரிவாயுவின் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X