என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்துக்கு 1600 தொழிலாளர்களை ரெயிலில் அழைத்து வந்த பிரியங்கா
Byமாலை மலர்9 Jun 2020 8:06 AM GMT (Updated: 9 Jun 2020 8:06 AM GMT)
மும்பையில் சிக்கி தவித்த 1600 தொழிலாளர்களை பிரியங்கா தனி ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
லக்னோ:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக இருந்து கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொது முடக்கத்தால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கி தவித்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக அவர் ஏற்கனவே 1000 பஸ்களை ஏற்பாடு செய்தார்.
ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அவர் களை உத்தரபிர தேசத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் அந்த பஸ்களை மாநில அரசு உள்ளே அனுமதிக்காமல் பிரச்சனையை உருவாக்கியது.
இந்த நிலையில் மும்பையில் சிக்கி தவித்த 1600 தொழிலாளர்களை பிரியங்கா தனி ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் 1600 தொழிலாளர்களையும் அழைத்துவர சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்தார். பின்னர் அந்த ரெயில் அவர்களை ஏற்றிக்கொண்டு உத்தரபிரதேசம் வந்தடைந்தது.
இதுசம்பந்தமாக மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சூரஜ்சிங் கூறும்போது,
உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் மீட்டுவர பிரியங்கா காந்தி தொடர்ந்து முயற்சித்து வந்தார். எங்களுடன் இதுசம்பந்தமாக உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி இப்போது 1600 தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளோம். ஏற்கனவே பஸ்சில் அழைத்து வந்தபோது பிரச்சனையை உருவாக்கினார்கள். இதனால் தான் சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்து அழைத்து வந்தோம் என்று கூறினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக இருந்து கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொது முடக்கத்தால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கி தவித்தனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக அவர் ஏற்கனவே 1000 பஸ்களை ஏற்பாடு செய்தார்.
ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அவர் களை உத்தரபிர தேசத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் அந்த பஸ்களை மாநில அரசு உள்ளே அனுமதிக்காமல் பிரச்சனையை உருவாக்கியது.
இந்த நிலையில் மும்பையில் சிக்கி தவித்த 1600 தொழிலாளர்களை பிரியங்கா தனி ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளார். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் 1600 தொழிலாளர்களையும் அழைத்துவர சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்தார். பின்னர் அந்த ரெயில் அவர்களை ஏற்றிக்கொண்டு உத்தரபிரதேசம் வந்தடைந்தது.
இதுசம்பந்தமாக மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சூரஜ்சிங் கூறும்போது,
உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் மீட்டுவர பிரியங்கா காந்தி தொடர்ந்து முயற்சித்து வந்தார். எங்களுடன் இதுசம்பந்தமாக உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி இப்போது 1600 தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளோம். ஏற்கனவே பஸ்சில் அழைத்து வந்தபோது பிரச்சனையை உருவாக்கினார்கள். இதனால் தான் சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்து அழைத்து வந்தோம் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X