என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா பாதிப்பா? - சகோதரர் மறுப்பு
Byமாலை மலர்6 Jun 2020 7:20 AM GMT (Updated: 6 Jun 2020 7:20 AM GMT)
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அவரது சகோதரர் மறுத்துள்ளார்.
புதுடெல்லி:
நிழலுலக தாதாவும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. தாவூத் வீட்டு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் கூறியிருக்கிறார். தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் வீட்டில்இருப்பதாகவும் அனீஸ் தொலைபேசி மூலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தாவூத் இப்ராகிம் மரணம் அடைந்துவிட்டதாகவும் இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் போலியான தகவல் பரவி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராகிம் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான அவர் பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிழலுலக தாதாவும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. தாவூத் வீட்டு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் கூறியிருக்கிறார். தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் வீட்டில்இருப்பதாகவும் அனீஸ் தொலைபேசி மூலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தாவூத் இப்ராகிம் மரணம் அடைந்துவிட்டதாகவும் இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் போலியான தகவல் பரவி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராகிம் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான அவர் பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X