search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை (பழைய படம்)
    X
    மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை (பழைய படம்)

    மகாராஷ்டிராவில் உச்சம்: இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரு நாளில் 2,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,710 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 24 மணி நேர தகவல் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×